Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
போளூர் : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் எல்.ஐ.சி .கிளையில் கிளை மேலாளர் எல்.ஐ.சி கிளையில் உள்ள அனைத்து தோழமை சங்கங்களுக்கும் பெயர் பலகை வைக்க இடம் அளித்தார்.
லியாபீ முகவர் சங்க பெயர் பலகை வைத்த போது முகவர்களை அவமானப்படுத்தி பெயர் பலகையை அப்புறப்படுத்தினர். லியாபீ முகவர் சங்க பெயர் பலகை வைக்க இடம் ஒதுக்காததை கண்டித்தும் புது வணிக நிறுத்த போராட்டமும், லியாபீ சங்க பெயர் பலகை வைக்கும் வரை அலுவலகம் முன்பு கிளை மேலாளரை கண்டித்து அலுவலக வாயிலில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.
பெயர் பலகை வைக்கும் வரை எல்.ஐ.சி முகவர் சங்கம் தொடர்ந்து ஆர்பாட்டம் செய்வது எனவும் அதற்குள் பெயர் பலகை வைக்க தவறினால் வேலூர் மாவட்ட சங்கத்துடன் இணைந்து போளூரில் கிளைமேலாளரை கண்டித்து பெரிய ஆர்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.